புதுதில்லி:
‘காஷ்மீர் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர், அனுராதா பாஷின், மீது சமீபத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதற்கும் வழக்குரைஞர் தீபிகா சிங் மீது வழக்குப் பதிவு செய்திருப்ப தற்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்முவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், 2019 ஆகஸ்ட்5 அன்று ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகள் மீது மத்தியஅரசாங்கம் தாக்குதல் தொடுத்ததை விமர்சனம் செய்தமைக்காக, ‘காஷ்மீர் டைம்ஸ்’ நாளிதழ் ஆசிரியர் அனுராதா பாஷின் தாக்கப்பட்டிருக்கிறார். இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.திருமதி அனுராதா பாஷின் இவ்வாறு பேசியதோடு மட்டுமல்லாமல், ஆகஸ்ட் மாதமேஉச்சநீதிமன்றத்தில் அரசாங்கம் தகவல் தொடர்பிற்கு முழுமையாகத் தடை விதித்திருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கும் சென்றிருந்தார். கடந்த மூன்று வாரங்களில், அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருந்த அவருடைய குடியிருப்பிலிருந்து வலுக்
கட்டாயமாக அவர் வெளியேற்றப் பட்டிருக்கிறார். அவருடைய பத்திரிகை அலுவலகமும் பூட்டப்பட்டிருக்கிறது. ஆயினும் “உண்மையைப் பேசுவதை நான் தொடர்வேன்,” என்று அவர் அறிவித்திருக்கிறார்.
கார்ட்டூன் பதிவேற்றத்துக்காக வழக்கு
மற்றுமொரு அதிர்ச்சி யளிக்கும் நிகழ்வாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கோவில் பூசாரி ஒருவர் எட்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்ளாக்கி,சித்ரவதை செய்து கொலைசெய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகநீதிமன்றத்தில் துணிச்சலு டன் வழக்கினை நடத்திக் கொண்டிருக்கும் வழக்குரைஞர் தீபிகா சிங் ரஜாவாத் , பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள், இப்போது துர்கா பூஜை கொண்டாடுகிறார்கள் என்று வெளியாகியிருந்த கார்ட்டூன் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, இவ்வாறு ஆண்டு முழுவதும் பெண்களுக்கு எதிராக மோசமாக நடந்துகொள்பவர்கள், நவராத்திரி கொண்டாடுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்டித்து, இவருடைய இல்லத்தின் முன்பு, குண்டர் கும்பல் ஒன்று, ரகளையில் ஈடுபட்டிருக்கிறது. கடைசியில் அந்தக்குண்டர் கும்பல் கலைந்து சென்றுள்ள போதிலும், வழக்குரைஞர் தீபிகா சிங் ரஜாவாத் நவராத்திரி விரதம் இருந்த அதே நாளன்று, அவருக்கு எதிராக, ‘இந்து உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக’ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு, நீதி தேவை கோழைத்தனமான மிரட்டல்
களுக்குப் பணியாது, அவற்றைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் இவ்விரு வீரஞ்செறிந்த பெண்களின் பக்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிற்கிறது.வழக்கறிஞர் தீபிகா, 2018இல் தில்லியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் உரையாற்றியிருக்கிறார். அதேபோல் அனுராதா காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உபி முகநூல் பக்கத்தில் விரிவுரை யாற்றி இருக்கிறார். இவர்களிரு வருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கி றது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும், நீதி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ந.நி.)