tamilnadu

img

கர்நாடக விவசாயிகளின் மகத்தான தலைவர் தோழர் மாருதி மன்படே காலமானார்.... அகில இந்திய விவசாயிகள் சங்கம் அஞ்சலி

புதுதில்லி:
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய கிசான் கவுன்சில் உறுப்பினரும், கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவருமான தோழர் மாருதி மன்படே மறைவிற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவரான தோழர் மாருதி மன்படே கோவிட்-19 தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி, மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 65. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய கிசான் கமிட்டி மற்றும் அகில இந்திய விவசாயி கள் கவுன்சில் உறுப்பினராகவும், தற்சமயம் கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவ ராகவும் இருந்து வந்தார்.  

தோழர் மாருதி மன்படே மிகவும் ஒடுக்கப்பட்ட குடும்பப் பின்னணியில், விவசாயத் தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் கட்சியின் முழுநேர ஊழியராக வேண்டும் என்பதற்காக, தான் பார்த்துவந்த அரசாங்க வேலையை உதறி விட்டு 1981-82இல் வெளியேறியவர். அதன்பின்ஜில்லா பரிஷத் தலைவராக இருந்திருக்கிறார். சட்டமன்றத் திற்கும், நாடாளுமன்றத்திற்கும் கட்சியின் சார்பில் போட்டியிட்டி ருக்கிறார்.தோழர் மாருதி மன்படே கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து இயக்கங்களி லும் முன்னிலையில் நின்று செயல்பட்டவர். குறிப்பாக தேவதாசிப் பெண்களின் விடுதலைக் காக அவர்களை அணிதிரட்டி இயக்கங்களை நடத்தினார். அதேபோன்று தலித் விடுதலை முன்னணியையும் ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்பட்டவர். அவர் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தின் கீழான தொழிலாளர் களையும், பஞ்சாயத்துத் தொழிலாளர்களையும் அணி திரட்டியதில் முன்னணி வகித்தார்.அதேபோன்று மாநிலத்தில் கரும்பு விவசாயிகள் போன்றுஒவ்வொரு பயிர் விவசாயி களுக்கும் தனித்தனி சங்கங்கள் அமைத்திட வேண்டியது அவசியம்என்று வலியுறுத்தி வந்தார்.

மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டத்திலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத் திலும் உறுதியுடன் நின்றவர்.அவருடைய இழப்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கும், தொழிலாளர் – விவசாயிகள் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தின ருக்கும், சக தோழர்களுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம்தன் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது என சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளனர்.(ந.நி.)