tamilnadu

img

கொரோனா பாதிப்பு 137 ஆக உயர்வு- புராதானச் சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவு

கொரோனா அச்சம் அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதும் உள்ள புராதான சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சு180000ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7150ஐ நெருங்கி உள்ளது.. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை 137 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களுக்கு வரும் மார்ச் 31 ம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் உள்ள புராதான சின்னங்களை வரும் மார்ச் 31 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.