தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் முறையாக பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ தாண்டி உள்ளது. இன்று மட்டும் 2174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35521 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50193 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதராத்துறை அறிவித்துள்ளது.