tamilnadu

img

ஒவ்வொரு பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம்....

புதுதில்லி:
உலகம் முழுவதும் 150 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளும் பிரிட்டன், ரஷ்யாவின் தலா ஒரு கொரோனா தடுப்பூசியும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை போடுவது தொடர்பான விரிவான செயல் திட்டத்தை நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு தயாரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்துத்துறைகளின் அதிகாரிகளுடன் பல முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  கூறுகையில், “அடுத்த ஆண்டு ஜூலைக்குள் 25 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய குளிர்சாதனகிடங்குகளில் கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று அனைத்துப் பள்ளிகளிலும் தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் வார்டு வாரியாக அனைத்து தரப்புமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். எந்தெந்த பகுதிகளில் எப்போது தடுப்பூசி போடப்படும். எந்த நேரத்தில்மக்கள் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்கள்எஸ்எம்எஸ் மூலம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தன.