tamilnadu

img

மத்திய அரசின் பொய்யை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் அருண் ஷோரி அதிரடி!

புதுதில்லி, ஏப்.10-ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுபொய் சொன்னதை நிரூபித்துக் காட்டுவோம் என்று மூத்த வழக்கறிஞர் அருண் ஷோரி தெரிவித்துள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ‘தி இந்து’ இதழில் வெளியான ஆதாரங்களையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கறிஞர்கள் எம்.எல். ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கிலேயே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கே.எம். ஜோசப், எஸ்.கே. கவுல் அமர்வு இவ்வாறு கூறியிருக்கிறது.இந்நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான அருண் ஷோரி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேட்டியளித்துள்ளார். அதில்,ரபேல் தொடர்பான ஆவணங்கள் எல்லாமே பாதுகாப்பு அமைச்சகத்தின் மிகமுக்கிய ஆவணங்கள் ஆகும்.எங்களிடம் நீதிபதிகள் தொடர்ந்து முறைகேட்டிற்கான ஆதாரங்களை கேட்டார்கள். நாங்கள் இதோ ஆதாரங் களை சமர்ப்பித்து விட்டோம்.நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இருப்பதாககூறி, தற்போது விசாரணைக் கும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டது.இந்த ஆதாரங்களை எல்லாம் நீதிமன்றத்தில் இத் தனை நாட்கள் மத்திய அரசுமறைத்து வந்தது. தற்போதுஅது வெளியே வந்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான ஆவணங்களை அளித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தையே அவர்கள் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே, உச்ச நீதிமன்றத்தைமத்திய அரசு தவறாக வழிநடத்தியதை நிரூபிப்போம். அதற்கான வாய்ப்புதான் இது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முதலில் வழங்கிய தீர்ப்பை மாற்றும் அளவிற்குஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட்டு இருக்கின்றன. இந்த புதிய ஆதாரங்களின்படி இந்தவழக்கு செல்லும் பாதை மொத்தமாக மாறப் போகிறது.இவ்வாறு அருண் ஷோரி குறிப்பிட்டுள்ளார்.

;