புதுதில்லி:
ஹத்ராஸ் வழக்கில், தடய அறிவியல்சோதனை தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால், அதில் கிடைத்த முடிவை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக (AMU) மருத்துவர் அஜிம் மாலிக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல ஹத்ராஸ் பெண்ணின் மருத்துவ, சட்ட வழக்கு அறிக்கைக்கு சான்றுஅளித்திருந்த ஒபைத் ஹக் என்ற மருத்துவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், வால்மீகி பிரிவைச் சேர்ந்த 19 வயது தலித்
இளம்பெண் தாக்குர் பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள் நான்கு பேர்களால், மிகக் கொடூரமான முறையில்பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.செப்டம்பர் 14 அன்று இச்சம்பவம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர் அலிகார்முஸ்லிம் பல்கலைக்கழக மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 வாரசிகிச்சைக்குப் பின் செப்டம்பர் 22 அன்று சுயநினைவு வந்தது. அப்போது தனக்கு நேர்ந்தபாலியல் வன்கொடுமை குறித்து மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். பின்னர் உயர்மருத்துவ சிகிச்சைக் காக தில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தலித் பெண் செப்டம்பர் 29 அன்று மரணம் அடைந்தார்.
இந்தப் பிரச்சனையில் ஆரம்பம் முதலே மெத்தனம் காட்டி வந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் காவல்துறை, இறந்துபோன இளம்பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் தாங்களாகவே இரவோடு இரவாக எடுத்துச் சென்று அதிகாலை2.20 மணியளவில் எரித்துச் சாம்பலாக்கியது. இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பாலியல் வன் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆதாரத்தை அழிக்கும் முயற்சிபோல தெரிவதாக சந்தேகங்கள் எழுந் தன. அதற்கேற்ப, உத்தரப்பிரதேச ஏ.டி.ஜி.(சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார், தனதுசெய்தியாளர் சந்திப்பில், தடயவியல் அறிக்கையை மேற்கோள் காட்டி, தலித்இளம்பெண் வல்லுறவே செய்யப்படவில்லை என்று தெரிவித்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது. வன்கொலை வழக்கில்கைது செய்யப்பட்ட 4 பேரும் நிரபராதிகள்என்று பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக் களும் பகிரங்கமாக பேட்டி அளிக்கத் துவங்கினர். அவர்களும் தடயவியல் அறிக்கையைத்தான் மேற்கோள் காட்டினர்.இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கில் வல்லுறவு குற்றம் நடந்துள்ளதா? என்பதற்கு தடயவியல் அறிக்கையை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று,இளம்பெண் முதன்முதலாக சிகிச்சைக்காகசேர்க்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர் அஜிம் மாலிக் கூறினார்.
“பாலியல் வல்லுறவு வழக்குகளில், சம்பவம் நடந்த 96 மணி நேரத்திற்குள் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டாக வேண்டும்; அவ்வாறு செய்தால் மட்டுமே வல்லுறவைக் கண்டுபிடிக்க முடியும்.இது ஏற்கெனவே அரசாங்கங்கள் அளித்தவழிகாட்டுதலும் ஆகும். ஆனால், ஹத்ராஸ்பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று கூறப்படும் நாளிலிருந்து (செப்.14), 11 நாட்கள் கழித்து செப்டம்பர் 22 அன்றுதான் தடயவியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. எனவே, இந்த சம்பவத்தில்வல்லுறவு நடந்ததை தடயவியல் பரிசோதனை அறிக்கையால் உறுதிப்படுத்த முடியாது” என்று டாக்டர் மாலிக் குறிப் பிட்டிருந்தார்.இது உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் டாக்டர் அஜிம் மாலிக் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.இந்நிலையில்தான், மருத்துவர் அஜிம் மாலிக், அவருடன் பணியாற்றிய மருத்துவர் ஓவைத் ஹக் ஆகியோர் மருத்துவமனையிலிருந்து விடுவிக் கப்பட்டுள்ளனர்.மருத்துவமனை நிர்வாக முடிவின் பின்னணியில் பாஜக அரசின் அழுத்தம் இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. தாங்கள் ஏன் இலக்கு ஆக்கப் பட்டோம் என்பது தெரியவில்லை என்று டாக்டர் ஹக் வேதனை தெரிவித்துள்ளார்.