tamilnadu

போதிய ஏடிஎம் இயந்திரங்கள் இல்லை

புதுதில்லி,மே 16- இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இயக்கத்தில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு கடந்த ஆண் டில் மத்திய ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளால் வங்கிகளுக்கும் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, பிரிக்ஸ் நாடுகளிலேயே இந்தியாவில் தான் குறைந்த ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. இதனால் பணப் புழக்கத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுவும் தேர்த லில் மோடிக்கு எதிராக இருந்தது என தகவல்வெளியாகி யுள்ளது.