tamilnadu

img

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிடக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரி அரசு நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, அரசின் நடவடிக்கைகளில் தலையிட சிறப்பு அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளது என்று மத்திய அரசு 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரம் கிடையாது எனக்கூறி, ஆளுநருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. 
இதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து. இந்த தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத் கிரண்பேடி மற்றும் மோடி அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் போது புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. மேலும் இம்மனுவுக்கு செப்4ம் தேதிக்குள் பதிலளிக்க கிரண்பேடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு வழக்கை ஒத்திவைத்தது.