மத்திய சுகாதாரத்துறையும்,புதுவை நலவழித்துறையும் இணைந்து வழங்கும் சிறந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமுதாய நலவழி மையத்திற்கான “காயகல்ப்” விருது, “காசோலை” புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைத்தது. இதனையடுத்து மருத்துவர்கள், ஊழியர்கள் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரும், புதுச்சேரி பேரவைத் தலைவருமான வி.பி.சிவக்கொழுந்து சந்தித்து வாழ்த்து பெற்றனர்.