தில்லியில் பள்ளி வளாகத்தினுள் 2500லிட்டர் டீசல் டாங்கை புதைத்து பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இயங்கி வந்த கே.ஆர். மங்கலம் என்ற தனியார் பள்ளியில் சுமார் 2500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் தொட்டியை புதைத்து வைத்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோதையாவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், துணை முதலமைச்சரை வரும் திங்கட்கிழமை மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கவுள்ளனர்.