tamilnadu

img

மாணவர்களுக்கு மரக்கன்று

புதுச்சேரி, ஜூன் 5-மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் நுழைவு தேர்வு பயிற்சி முகாம் இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்கலைக் கழக கிளை சார்பில் லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள விளிம்புநிலை மக்கள் வாழ்வாதாரம் மையத்தில் நடைபெற்றது. கடந்த 20 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயிற்ச்சி பெற்றனர்.பயிற்சிமுகாம் நிறைவு விழா ஜூன் 5 அன்று நடைபெற்றது. சங்கத்தின் புதுச்சேரி பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வந்தனா, மாணவர் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த், பல்கலைக் கழக மாணவர்கள் ஜஸ்டின், அருண், செக்குறா, சச்சின், நிர்மல், கௌதம், பிரவீன், பிரபா, நூருதீன், பாரதி, சத்யா, தனலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.