புதுச்சேரி, டிச. 21 - புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்த லில் இந்திய மாணவர் சங்கம் (SFI) அனைத்து இடங்களையும் முழு மையாகக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆண் டின் இறுதியில் இந்த தேர்தல் நடை பெறும். அதன்படி 2024-ஆம் ஆண்டுக்கான தேர்தல், முதற்கட்ட மாக டிசம்பர் 18 அன்று நடைபெற்றது.
20 ஆயிரம் மாணவர்கள் வாக்கு!
காலாப்பட்டில் உள்ள புதுவைப் பல்கலைக்கழகம், புதுவை சமு தாயக் கல்லூரி, காரைக்கால், அந்த மான், மாகி பகுதியில் உள்ள கல்லூரி களில் உள்ள 104 பிரிவுகளுக்கு தங்க ளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்ப தற்கு சுமார் 20 ஆயிரம் மாண வர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
காலாப்பட்டில் உள்ள புதுவைப் பல்கலைக்கழகம், புதுவை சமு தாயக் கல்லூரி, காரைக்கால், அந்த மான், மாகி பகுதியில் உள்ள கல்லூரி களில் உள்ள 104 பிரிவுகளுக்கு தங்க ளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்ப தற்கு சுமார் 20 ஆயிரம் மாண வர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
தனித்து வென்ற எஸ்எப்ஐ
மற்ற பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த நிலையில் புதுச்சேரி மத்திய பல்க லைக்கழகத்தில் எஸ்எப்ஐ-க்கு எதிராக ஏஐஎஸ்எப் மற்ற மாணவர் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் நான்கு முனைப் போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் இந்திய மாண வர் சங்கத்திற்கு எதிராக பாஜக-வின் ஏபிவிபி, காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ, திமுக மாணவர் அமைப்பு ஆகியன போட்டி யிட்டன. ஏஎஸ்ஐஎப் மாணவர் பெரு மன்றம் திமுக அணியை ஆதரித் தது. அதேபோல், மாணவர் பிரதிநிதி கள், மாணவர் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை (டிச.21) நடைபெற்றது.
இதையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகளை மத்திய பல்கலைக்கழகம் அதிகா ரப்பூர்வமாக வெளியிட்டது.
57 பொறுப்புகளையும் கைப்பற்றியது
இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் இந்திய மாணவர் சங்கம் போட்டியிட்ட அனைத்து பொறுப்புகளிலும் முன்னிலை வகித் தது. தலைவர், செயலாளர் உள்ளிட்ட 57 பொறுப்பையும் இந்திய மாணவர் சங்கம் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர் பேர வைத் தலைவராக காயத்திரி எஸ். குமார், துணைத் தலைவர்கள் நர் வாடி குஷ்வந்த், கே. நசேஹா, செயலாளராக அபூர்வா நாயக், இணைச்செயலாளராக எஸ். தினேஷ், நிர்வாகக்குழு உறுப்பினர் களாக சஜிதா, ஜெரோம் எலிக்சர், ரிச்சாசீல், அகமதுபர் ஹென் பங்கத், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீதர், அஸ்வினி, அய்ஷா ஆனந்த், அஸ்வினி பி. கங்காதரன், சுதாஷ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.