எம்.எல்.ஏவுக்கு கொரோனா :வேப்பமரத்தடியில் நடந்த புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்
புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜீலை 20 ம் தேதி துவங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 2020-21 ம் ஆண்டிற்கு 9000 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது உரையை நிகழ்த்தினார். இதில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சட்டமன்ற மைய மண்டபம் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது. இதனால் சட்டமன்ற நுழைவு வாயிலில் வெப்பமரத்தடியில் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டமன்றம் கூடியது. இதற்காக மரத்தடியில் தற்காலிக பந்தல் போட்டு நாற்காலி-மேஜைகள் போடப்பட்டு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.