புதுச்சேரி கடற்கரையில் கொரோனா விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே கொரோனா விதிமுறைகளைத் தளர்த்தி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக டிசம்பர் 30,31 ஆம் தேதி, 2022 ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் இரவு நேர பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.