tamilnadu

img

ஏம்பல் சிறுமி பாலியல் வன்கொலை.... குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள்....

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன்  மாதத்தில்  7 வயது சிறுமி முற்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடற்கூராய்விற்குப்பின்னர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த  சாமுவேல் என்ற ராஜா(27) என்பவரை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் 6 மாத காலத்தில் நடை பெற்றது. டிசம்பர் 29 அன்று  நீதிபதி சத்தியா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ்ஒரு மரண தண்டனையும், சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு மரண தண்டனையும் உள்பட மூன்று மரண தண்டனைகள்  மற்றும்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், அபராதங்களும் விதித்து தீர்ப்பளித்தார். 

;