tamilnadu

புதுக்கோட்டை , திருவாரூர், நாகை , ‎விருதுநகர் முக்கிய செய்திகள்

நூறு நாள் திட்ட வேலையை 200 நாளாக உயர்த்தக் கோரிக்கை 
பொன்னமராவதி, அக்.6- புதுக்கோட்டை பொன்னமராவதியில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு சிறப்பு பேரவை கூட்டம் பி.நாகலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ச.மாரிகண்னு, ஆர்.பிர தாப்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐடி.யு.சி மாவட்ட தலைவர் கே.ஆர்.தர்மராஜன், வி.தொ.சா மாவட்ட செயலாளர் ஏனாதி ஏ.எல்.ராசு, வி.தொ.ச. மாவட்ட பொரு ளாளர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர்.  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான ந.பெரியசாமி சிறப்புரையாற்றினார். பேரவையில் 100 நாள் திட்ட வேலையை 200 நாட்கள் ஆக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ 400 சம்பளம் கொடுக்க வேண்டும். 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. பேரவையை தொடர்ந்து மாலையில் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக தீர்மானங்கள் விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொன்னமராவதியில் கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் சப்-ஜெயில் அமைக்க வேண்டும். தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அமர கண்டான் ஊருணியில் கரைகளை பலப்படுத்தி நடைபாதை சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். சின்ன திரும்மகேணி கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை 
குடவாசல், அக்.6-திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றியம், எரவாஞ்சேரி ஒன்றிய பகுதி மருதுவஞ்சேரியில் அசோக் நினைவு அரங்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியப் பேரவை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியத் தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியச் செயலாளராக வி.தீனதயா ளன், ஒன்றியத் தலைவராக என்.சிவா, பொருளாளராக ராம் பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப் பட்டுள்ள பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காஷ்மீரை காக்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கஜா புயலில் சேதமான அரசுப் பள்ளிக்கு  உதவி  
நாகப்பட்டினம், அக்.7- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், கரியாபட்டி னம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம்-15ல் தாக்கிய ‘கஜா புயலினால், வீழ்ந்து விட்டன. இப்பள்ளியின் சுற்றுச் சுவரைக் கட்டு வதற்காகத் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம், மாநில மையம் சார்பில் சனிக்கிழமை அன்று ரூ.ஒரு லட்சத்து, 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. கரியாபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற இவ்விழாவிற்கு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. ஸ்ரீதரன், மாநிலப் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொரு ளாளர் என். ஜெயச்சந்திரன் ஆகியோர் இணைந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் ரெ.அமுதராசுவிடம், ரூ.1, 25,000 வழங்கினர். நிதியைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் ஏற்புரையாற்ற, சங்கத்தின் வேதாரணியம் வட்டத் தலைவர் ஆர்.குணசேகரன் நன்றி கூறினார்.

ரயிலில் விழுந்து ஒருவர் தற்கொலை?
திருவில்லிபுத்தூர், அக்.6- திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது எஸ் ராமச்சந்திரா புரம். அங்குள்ள தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த அய்ய னார் மகன் தங்கராஜ் (20) இவர் மதுரையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி யில் மூன்றாமாண்டு படித்து வந்தார். சனிக்கிழமை மாலை வரை வீட்டிலிருந்தவர் திடீரென மாயமானார். இது குறித்து கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவில்லிபுத்தூர் தைலாகுளம் தண்ட வாளத்தில் ரயில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்ப தாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தெற்குத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.  விசாரணை நடைபெற்றுவருகிறது.