அறந்தாங்கி, அக்.2- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அர சர்குளம் பிர்காவில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி யாளர் பெயரில் அரசு அடங்கல் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சுப்பிரமணியபுரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர், விவசாயி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் கூறும்போது குத்தகை செய்யும் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு வரை அரசின் மூலம் அடங்கல் வழங்கப்பட்டது, அதை கடைப்பிடிக்காமல் இந்த ஆண்டும் வழங்கப்படாமல் தமிழக அரசு மறுத்து வருகிறது. இது வரை ஏழு ஆண்டுகாலமாக பருவ மழை தவறிய காரணத்தினால் கடந்த மாதம் வந்த கஜா புயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலை யில் அடங்கல் சான்று வழங்க தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. உடனே தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய அடங்கலை உடனே கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அடங்கல் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். வட்டாட்சியர், விவசாயிகளின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி சுப்ரமணியபுரம் பேருந்து நிலையத்தில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.