tamilnadu

img

பன்றிகள் தொல்லை: மீண்டும் அதிகரிப்பு

தஞ்சாவூர் நவ.12- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள், குப்பைக் கழிவுகள், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீர் ஆகிய இடங்களில் காணப்படும் கழிவுகளை பன்றிகள் கிளறு வதன் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பன்றிகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது இப்பிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது. எனவே பன்றிகள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.