சென்னை, மார்ச் 21 மாநில அரசு எடுத்து வரும் முன் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாதீர்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று (மார்ச் 21) கேள்வி நேரம் முடிந்தும், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? நிலைமையை சமாளிக்க அரசு தயாரா இருக்கிறதா? அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், ஆய்வகங்களில் ஏற்படுத்தியிருக்கும் வசதி கள் குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி னார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், “தில்லியில் இருந்து வந்த நபருடன் தொடர்பு கொண்ட 163 பேரை கண்டுபிடித்திருக்கி றோம். அயர்லாந்திலிருந்து இந்தியா வந்த மாண வரிடம்ட தொடர்பில் இருந்த 94 பேரை கண்டு பிடித்திருக்கிறோம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலை மூன்று இன்னும் வரவில்லை. எனவே யாரும் பயப்பட வேண்டாம்” என்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், அச்ச உணர்வு இல்லாமல் மக்கள் அதிக அளவில் வெளியே வருவதும் பயணம் மேற்கொள்வதும் கவலை அளிக்கிறது. அரசு எடுத்து வரும் முன்னெச்ச ரிக்கையை அலட்சியப்படுத்தாமல் முழுமையாக ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் அரசுக்கு மிகப்பெரிய சவாலாகதான் இருக்கிறது. ஓய்வு பெற்ற மருத்துவர்கள் தாமாக முன்வந்து பணியாற்ற வும் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசு மருத்துவ மனைகள் அனைத்திலும் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். சில தனியார் மருத் துவமனைகள் மற்றும் ஆய்வகங்களும் பரிந்துரை செய்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.