tamilnadu

img

பரிதவிக்கும் சென்னைவாசிகள் - செ.கவாஸ்கர்

பரிசோதனை குறைவு ; மருத்துவ ஏற்பாடுகள் பலவீனம்; அரசு அலட்சியம்

கொரோனா பாதிப்பில் இந்தியா அளவில் 3வது இடத்தில் தமிழகம் உள்ளது. மாவட்டங்கள் வாரியாக கணக்கிட்டால் இந்தியா அளவில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. சென்னையில்  32 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இவற்றில் 7500 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. அப்படியென்றால் ஏறக்குறைய 25 விழுக்காடு தெருக்களில் கொரோனா வைரஸ் தொற்று ‘சமூகப் பரவலாக’ மாறியுள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள (ஜூன் 25  கணக்குபடி) 67 ஆயிரம் பேரில் 46 ஆயிரம் பேர் (70சதவீதம்) சென்னையில் உள்ளனர். இறந்த 866 பேரில் 668 பேர் (80சதவீதம்) சென்னையை சேர்ந்தவர்கள். சென்னை புறநகர்ப்பகுதிகளையும் சேர்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 4 பிரிவு களாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சுத் திணறல் மற்றும் அறிகுறி அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், குறைவான அறிகுறி உள்ளவர்கள் கொரோனா சிகிச்சை மையத்திலும், மிகக்குறைவான அறி குறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களி லும், அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பரிசோதனைகள்

ஒரே நாளில் 30 ஆயிரம் (மாதிரிகள்) சோதனை நடத்தும் அளவிற்கு கட்டமைப்பு உள்ளதாக சுகா தாரத்துறை  அமைச்சர்  கூறினாலும், அதிகபட்ச மாக நாளொன்றுக்கு 24 ஆயிரம் நபர்களிடம் இருந்து சளி, ரத்த  மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதி க்கப்படுகின்றன. அதிகளவு பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் இந்த மூன்றும் அதிவேகமாக நடைபெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதற் கேற்ப சென்னை மாநகராட்சியில் பரிசோதனை நடைபெறுவதில்லை. இதுவரை தமிழகத்தில் 9.72 லட்சம் பேருக்கு (மக்கள் தொகையில்  1.3 சத வீதம்) மட்டுமே கொரோனா சோதனை நடத்தப் பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 2.35 லட்சம் பேர் (மக்கள் தொகையில் சுமார் 3 சதவீதம்).

பரிசோதனை அளவு அதிகரிக்கும் போது, தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிக மாக இருப்பதை கண்டறியமுடிகிறது. உதாரண த்திற்கு ஜூன் 23 அன்று 24 ஆயிரம் நபர்களை பரி சோதித்ததில் 2500 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் தற்போது தினசரி 500 காய்ச்சல் முகாம்கள் நடத்தி அறி குறி கண்டறிந்து பின்னர் கொரோனா பரி சோதனைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதி’  திட்டம் தோல்வியா?

மே மாதம்  சென்னையில் 1000க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது 90 பகுதிகள் மட்டுமே உள்ளன. ஒரே தெரு வில் 5 பேர் பதிக்கப்பட்டால் மட்டுமே அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படுகிறது. இதன் காரணமாக ஜூன் 15ம் தேதி 369ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் ஜூன் 21-ம் தேதி 61ஆக குறைந்தது. தற்போது 90 ஆக அதிகரித்து ள்ளது. தற்போது நாளொன்றுக்கு 1400க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படு வது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் தட்டுப்பாடு

ஒரு மூன்றடுக்கு முகக்கவசத்தை (டிரிபிள் லேயர் மாஸ்க்) 6 மணி நேரம் வரைதான் பயன் படுத்த முடியும். அரசிடம் ஏராளமான முககவசங் கள் இருப்பு இருப்பதாக கூறினாலும், அவற்றை தொற்று பாதித்தவர்களுக்கு கொடுப்பதில்லை. உதாரணமாக சிகிச்சை மையங்களில் 24 மணி நேரத்திற்கு ஒரு முகக்கவசமும், தனிமைப் படுத்தும் மையங்களில் 2 நாளைக்கு ஒரு முகக்கவ சமும் வழங்கப்படுகிறது. பல மையங்களில் தினசரி படுக்கை, அறைகளை கூட சுத்தம் செய்து, துடை க்காமல் உள்ளனர். இதற்கான ஊழியர்களும் பற்றாக்குறையாக உள்ளது.

ஒரே ஆம்புலன்சில்..

தொற்று பாதித்தவர்களுக்கு பாதிப்பின் அளவு வெவ்வேறாக உள்ளது. அதனடிப்படையிலேயே நான்காக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் தொற்று பாதித்த 7 பேரை ஒரே ஆம்புலன்சில் கொண்டு செல்கின்ற னர். இதனால் பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவர்களுக்கு அதிகமாகிறது. இதுபோன்ற தகவல்களால் பரிசோதித்துக் கொள்ளவும், சிகிச்சைக்கு செல்லவும் மக்கள் அஞ்சுகின்றனர்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொடுக்கப் படும் பாதுகாப்பு உடைகள் (பிபிஇ கிட்) தரமற்ற வையாக உள்ளன. என்-95 முககவசத்திற்கு பதிலாக இரண்டாம்தர கே-95 முகக்கவசமே தரப்படு கிறது. இதன்காரணமாக சிகிச்சை அளிக்கும் மருத் துவர்களும், செவிலியர்களும் தொற்றுக்கு உள்ளா கின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையின் தலைவர் உட்பட 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணி யாளர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது வரை  2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் உரிய நேரம் ஓய்வும் அளிக்கப்படுவதில்லை.

தெர்மல் மீட்டரிலும்...

கிருமி நாசினி, ஸ்பிரேயர், பிளிச்சிங் பவுடர், முகக்கவசம் போன்றவை வாங்கியதில் ஊழல், உணவு அளிப்பதில் முறைகேடு, தற்காலிக களப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர் களுக்கு சம்பளம் வழங்காத பிரச்சனை, இறப்பு எண்ணிக்கையை மறைத்தது என ஏகப்பட்ட புகார் கள் மாநகராட்சியை சுற்றி வலம் வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் கள் ஒவ்வொருவரிடமும் உடல் வெப்ப நிலையை அறியும் தெர்மல் மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தெர்மல்மீட்டர் கொள்முதலிலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த மீட்டர் சரிவர வேலை செய்யவில்லை, அளவீட்டை தவறாக காட்டுவதாக களப்பணியாளர்கள் புகார் கூறுகின்றனர்.

கைவிட்ட அரசு

கடந்த மார்ச் 24 முதல் தொடர் ஊரடங்கு அமலில் உள்ளது. 5 கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரட ங்கில் அவ்வப்போது சில தளர்வுகளை அறிவித்தா லும், அவை மக்கள் வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் அரசு மொத்தத்தில் வெறும் 2 ஆயிரம் ரூபாயை நிவாரண மாக அறிவித்தது. உரிய நிவாரணம் அறி விக்காமல் அரசும் மக்களை கைவிட்டுவிட்டது. இதனால் மக்கள் சொந்த கிராமங்களை நோக்கி செல்லத்துவங்கினர். இதன் விளைவாக, சென்னை யில் மட்டுமே சமூகப் பரவலாக இருந்த கொரோனா, தமிழகம் முழுவதும் பரவத் துவங்கி யுள்ளது.

சென்னையில் குறைந்தபட்ச வீட்டு வாடகையே 6 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஏற்கெனவே வாடகை வீட்டிற்கு கொடுத்து வைத்திருந்த அட்வான்ஸ் தொகையும் தீர்ந்துபோனது. எனவே, தொடர்ந்து வாடகை கொடுக்க முடியாதவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று சொந்த கிராமங்களை நோக்கி பல்வேறு வழிகளில் செல்கின்றனர். 35 லட்சம் பேர் சென்னையைவிட்டு வெளியேற அனுமதி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்படாத ஊரடங்கு, போதிய நிவார ணம் அளிக்காதது, உரிய காலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க திட்டமிடாதது என சென்னை நகர மக்களை பரிதவிக்க வைத்துள்ளது தமிழக அரசு. அதேவேளை, வழக்கம் போல் தங்கள் மேல் உள்ள தவறை திசை திருப்ப மக்கள் மீது பழிபோகிறது. ஊரடங்கு இந்த வருடம் முழு வதும் நீடிக்கக்கூடும் என்ற செய்தி மக்களின் பரி தவிப்பை மேலும் அதிகரித்துள்ளது. இனிமேலா வது அரசு விழித்துக்கொள்ளுமா? சென்னை மாநகர மக்களை காப்பாற்றுமா?