tamilnadu

img

மாணவர்களின் நலன் கருதியே பொதுத்தேர்வு ரத்து: செங்கோட்டையன்

சென்னை, பிப். 5- மாணவர்களின் நலன் கருதியே பொதுத்  தேர்வு ரத்து செய்யப்பட்டது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாAர்.  தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு  படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு  அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு கடும்  எதிர்ப்பு கிளம்பின. மேலும், 5, 8-ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வுக்கு எதிராக ஆசி ரியர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். எனினும், பள்ளிக் கல்வித் துறை தன் முடிவில் பின்வாங்காமல் உறுதி யாக இருந்தது.  இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர், 5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்  பட இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப் படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.  ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்’ என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதற்கு  அரசியல் கட்சிகளும், நடிகர் சூர்யா, வைரமுத்து, நடிகர் தனுஷ் உள்ளிட்ட திரை க்கலைஞர்களும் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோபிசெட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அமைச் சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலன்  கருதியே பொதுத்தேர்வு ரத்து செய்யப்  பட்டது. பொதுத்தேர்வுக்காக மாணவர்க ளிடம் வசூல் செய்த தொகை திருப்பிஅளிக்கப்  படும். வரும் காலங்களிலும் தற்போதுள்ள நிலையே தொடரும் என்றார்.