நெல்லையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லை ரெட்டையார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த நிலையில், சிபிஎம் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. பெண் வீட்டார் பலர் அலுவலகத்திற்குள் புகுந்து கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.