உதகை, மார்ச் 5- முதுமலையில் கிழே விழுந்ததில் படுகாயமடைந்த காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை சிங்கார சரகம் மாயார் ஆற்றோரத்தில் சுமார் 30 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று விழுந்து கிடப்பதாக புதன்கிழமையன்று வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் வனச்சரகர் காந்தன் தலைமையில் வனத்துறையினரும், உதவி கால்நடை மருத்துவர் தகோசலன் தலைமையில் மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மூன்று கும்கி யானைகளின் உதவியோடு அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால். சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து கள இயக்குனர் கே.கே.கெளசல் முன்னி லையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரி சோதனையில் யானை விழுந்ததில் உட்காயம் ஏற்பட் டதால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த யானை யின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.