tamilnadu

img

இரண்டாவது முறை பிரதமராகும் ஜெசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆர்டென் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்க  உள்ளார். 

நியூசிலாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில்  தொழிலாளர் கட்சி 49.2 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் ஜெசிந்தா ஆர்டென் தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளது. 
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜெசிந்தா ஆர்டென் கூறியதாவது: அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம்” என்றார்.