“கூட்டுறவே நாட்டுயர்வு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. தமிழக அரசு கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சொசைட்டிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட விதத்தில் பல குளறுபடிகளுடன் பொறுப்பேற்றும், குறிப்பிட்ட இடங்களில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுக்கள் ஆங்காங்கே பொறுப்புகளை ஏற்று நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் மாநிலம் முழுவதும் 19 சொசைட்டிகள் தொழிலாளர்களின் நலன்கருதி செயல்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள சொசைட் டிகளில் சிஐடியு, எல்பிஎப், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களிலிருந்து பல தொழிலாளர்கள் போட்டி யிட்டு தேர்தல் களத்தை சந்தித்தும், ஒரு சில கழகங்க ளில் கலந்துபேசியும் பொறுப்புகளை ஏற்று சொசைட்டி நிர்வாகத்தை நடத்தும் நிலையும் உள்ளது.
குறிப்பாக சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்துக்கழக பணியாளர்களின் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் லிட் X 367ல் சுமார் 12000 போக்குவரத்து தொழிலாளர்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றது. கடன் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து கழக நிர்வாகங்கள் (எம்டிசி, எஸ்இடிசி, டிஎன்எஸ்டிசி விழுப்புரம், கடலூர், திரு வண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், ஐஆர்டி மற்றும் பல்லவன் கன்சல்டென்சி) மாதந்தோறும் தவணைத் தொகையை சொசைட்டிக்காக பிடித்தம் செய்கின்றன. கூட்டுறவு சட்ட விதிமுறைகளின் படி பிடித்தம் செய்த தொகையை உரிய காலத்தில் கழக நிர்வாகங்கள் சொ சைட்டிகளுக்கு செலுத்துவது இல்லை. மேற்கண்ட சொ சைட்டிக்கு 31.10.2019 தேதிவரை மாநகர் மற்றும் விழுப் புரம் கோட்டம் சேர்த்து சுமார் ரூ. 73 கோடி நிலுவை வைத்துள்ளது. மேலும்,
மாநகர் போக்குவரத்துக்கழகம்
கூட்டுறவு சங்கம் X 367 ரூ. 39.23 கோடி
கூட்டுறவு சங்கம் X 214 ரூ. 16.17 கோடி
கூட்டுறவு சங்கம் JJ 99 ரூ. 3.50 கோடி
விழுப்புரம் கோட்டம்
கூட்டுறவு சங்கம் X 367 ரூ. 33.23 கோடி
கூட்டுறவு சங்கம் X 216 ரூ. 8.94 கோடி
கூட்டுறவு சங்கம் GK 294 ரூ. 6.91 கோடி
கூட்டுறவு சங்கம் VPM 3 ரூ. 1.05 கோடி
கும்பகோணம் கோட்டம்
கூட்டுறவு சங்கம் YP 669 ரூ. 1.84 கோடி
கூட்டுறவு சங்கம் RD 145 ரூ. 0.21 கோடி
கூட்டுறவு சங்கம் YT 69 ரூ. 6.77 கோடி
கூட்டுறவு சங்கம் OK 879 ரூ. 8.15 கோடி
மதுரை கோட்டம்
கூட்டுறவு சங்கம் A 3083 ரூ. 13.42 கோடி
கூட்டுறவு சங்கம் MD 107 ரூ. 10.26 கோடி
திருநெல்வேலி கோட்டம்
கூட்டுறவு சங்கம் Y 69 ரூ. 9.90 கோடி
கூட்டுறவு சங்கம் TT 13 ரூ. 7.38 கோடி
கோவை கோட்டம்
கூட்டுறவு சங்கம் CP 15 ரூ. 16.92 கோடி
கூட்டுறவு சங்கம் PE 48 ரூ. 9.40 கோடி
சேலம் கோட்டம்
கூட்டுறவு சங்கம் DD 158 ரூ. 6.27 கோடி
கூட்டுறவு சங்கம் SS 59 ரூ. 9.88 கோடி
மேற்கண்டுள்ள நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் சொசைட்டிக்காக தொழிலாளர்களின் சம் பளத்தில் பிடித்தம் செய்த தொகை சுமார் 210 கோடி ரூபாய் அளவிற்கு செலுத்தாமல் வருடம்/மாதக்கணக் கில் நிலுவை வைத்துள்ளன. சென்னை தேனாம்பேட்டையில் செயல்படுகின்ற சொசைட்டி (X 367)ஆனது 1957ல் போக்குவரத்து தொழி லாளர்களின் நலன்கருதி அன்றைய முதல்வர் ராஜாஜி யால் திறந்து வைக்கப்பட்டது. அது முதல் மே 2019 வரை உறுப்பினர்களின் நலன்கருதி சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் சுமார் 190 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியுள் ளோம். தற்போதைய நிலையில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கிக்கு அசலும், வட்டியுமாக சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு செலுத்த வேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி கழக நிர்வாகங்க ளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு கடிதங்கள் எழுதியுள்ளன. நிர்வாகக்குழு சார்பில் கழக நிர்வாக இயக்குனர்களை (எம்டிசி, டிஎன்எஸ்டிசி விழுப்புரம்) நேரடியாக சந்தித்தும் பேசியுள்ளனர். கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனைகள் குறித்து கடி தங்களும் எழுதப்பட்டுள்ளன. நேரில் சென்றும் நிர்வாகக் குழுவினால் உயர் அலுவலர்களிடமும் பேசியும் உள்ளனர். கடந்த மே மாதத்திற்குப் பிறகு சிசிசி வங்கி சொசைட் டிக்கு கடன் வழங்க முன்வரவில்லை. ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் அங்கத்தினர்களு க்கு கடன், டிவிடெண்ட், கணக்கு முடித்தல், தணிக்கை முடித்து ஆண்டுப் பேரவைக்கூட்டம் நடத்துதல் போன்ற பல சலுகைகள்/உரிமைகள் வழங்க முடியாமல் காலம் கடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள் பிடித்தம் செய்த தொகையினை சொசைட்டிக்கு உரிய காலத்தில் செலுத்தாமல் இருக்கும் சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் பிரதிமாதம் வங்கியின் தவணைத்தொகை யினை ஒழுங்காக செலுத்தியும்கூட “சென்னை மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம்”முன்வராமல் இருப்பது போன்ற நிலைபாடுகள், ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெ டுக்கப்பட்ட நிர்வாகத்தை முடக்குகின்ற அரசியல் உள் நோக்கமாக இருக்குமோ என கருத வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலை மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் உள்ளது. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் (சிஐடியு) சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு 17.6.2019 புதிய கடிதத்தின்மூலம், கழக நிர்வாகங்களிடமிருந்து நிலுவைத்தொகையினை வசூ லித்துத்தர வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தோம்.
கடந்த 6.8.2019 தேதிய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் நடைபெற்ற போக்குவரத்துக் கழகங்களின் அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற் குப்பிறகு, கழக நிர்வாகங்களில் ஓர் சிறு அசைவு ஏற் பட்டுள்ளதாகத் தெரிகிறது. பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிடித்தம் செய்த தவணைத்தொகையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சமீபத்திய கடிதத்தின் பேரில், கழக நிர்வாகங்கள் மாநிலம் முழுவதும் சொ சைட்டிகளுக்கு நிலுவை வைத்துள்ள தொகை முழுவ தையும் மேலும் காலந்தாழ்த்தாமல் வழங்க தாங்கள் நடவடிக்கை எடுப்பதோடு, போக்குவரத்து தொழிலாளர் கள் நலன் கருதி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் சொசைட்டிகளுக்கு லோன் வழங்க தமிழக முதல்வர் தலையிட வேண்டுமென சம்மேளனத்தின் சார்பில் 5.12.2019 தேதிய மனுவின் மூலம் கேட்டுக் கொண்டுள் ளோம்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நலன்கருதி, தமிழக முதல்வர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு. அரசு முன்வருமா?
கட்டுரையாளர் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) துணைத்தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் போ.க.ப.கூ சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் -X 367