நாமக்கல், செப்.3- நாமக்கல்லில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி செவ்வாயன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கவிஞர் இராம லிங்கம் பிள்ளை மகளிர் கல்லூரி வளா கத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை மத்திய அரசின் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை யின் துணைச்செயலர் டாக்டர்.அனு முன்னி லையில், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மகளிர் கல்லூரி வளாகத்தில் துவங்கி மோகனூர் சாலை - மணிக்கூண்டு வழியாக குளக்கரை திடலை வந்தடைந்தது. இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி குடிநீரை சிக்கனமாய் பயன் படுத்துவோம். குழாய்களில் குடிநீர் வீணா வதைத் தவிர்ப்போம். மழைத்துளி நிலத்தடி நீர் ஆதாரம் உள்ளிட்ட வாசகங்களை முழங்கி சென்றனர். இப்பேரணியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேரா சிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந. அகிலா, நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.