நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான ஜி.சகாயஆன்றனி அக்டோபர் 7 ஆம்தேதியன்று தனது வழக்கமான பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும்வேளையில் இரவு சுமார் 8 மணியளவில் அவரது வீட்டின் அருகில் மறைந்திருந்த சமூகவிரோத கும்பல் அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் கொடூரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சமூக விரோத கும்பலின் இந்த கொடூர தாக்குதலை கண்டித்தும், குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார குழுக்கள் சார்பில் சுவாமியார்மடம், தெங்கம்புதூர் உட்படபல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநில செயற்குழுஉறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மாதவன்,எம்.அண்ணாதுரை, எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், எம்.அகமது உசேன், என்.எஸ்.கண்ணன், கே.தங்கமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்த்தாண்டம் வட்டார குழு சார்பில் செயலர் அனந்தசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன்டெல்பின், மோகன் குமார், சுப்பரமணியம்,வின்சென்ட், சர்தார் கலந்துகொண்டனர்.