தரங்கம்பாடி, ஜூன் 7- நாகை மாவட்டம், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணை யர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், துணை தலைவர் மைனர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா நோய் தடுப்பு பணியை உறுப்பினர்கள் பாராட்டினர். ஏராளமான பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.