தரங்கம்பாடி, நவ.21- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு நீதிக் கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், சங்கத்தை சேர்ந்த சாமித்துரை, பவுல் சத்தியராஜ், ஐயப்பன், அருண்,செல்வக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.