tamilnadu

img

நாகை ஆக்கூரில் தமுஎகச கலை இலக்கிய இரவு

நாகப்பட்டினம், ஜூலை 21- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஆக்கூர் கிளை சார்பில் கலை இலக்கிய இரவு நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் ஆக்கூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. சங்கக் கிளைத் தலைவர் சொ.ராமமூர்த்தி தலைமை வகித்தார். டாக்டர் கே. பாலகிருஷ்ணன், டாக்டர் என்.எஸ்.குடியரசு, ஏ.இக்ரம் ரசூல், கிளை நிர்வாகிகள்   சு.சிவராமன், மாரி.தெட்சி ணாமூர்த்தி, ஹ.சலாகுதீன், எம்.சி. ஜீவா, வே.ஹரிஹரஜின்னா, என்.முரு கானந்தம் முன்னிலை வகித்தனர். கிளைப் பொருளாளர் கோ.அன்பு நாதன் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் பேராசிரியர் ப.பாலசுந்தரம் துவக்கவுரையாற்றினார். தோழமைச் சங்கங்களின் நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், ஏ.ஆர்.சந்திரமோகன், ஜி.சுதாகணபதி, பொறியாளர் வி. வேல்முருகன், ஆர்.பக்கிரிசாமி, ஆர். மணிவண்ணன், எஸ்.சுந்தரேசன் வாழ்த்துரை வழங்கினர். சங்க மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, மாநிலப் பொதுச்செயலாளர் கவிஞர் களப்பிரன், மாநிலத் துணைத் தலை வர் பேராசிரியர் செ.சுந்தரவள்ளி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டப் பொருளா ளர் கவிஞர் நா.ராஜாராமன், கல்லூரி மாணவி பாக்கியா கவிதை வாசித்த னர். டாக்டர் ‘நன்னானே’ சு.ரமேஷ், மாப்படுகை இளையராஜா, செம்பை குணா, பொன்.ராஜேந்திரன், என்.எஸ். உதயகுமார் ஆகியோர் மக்களிசைப் பாடல்கள் பாடினர். தஞ்சை கண்மணி கலைக்குழுவின் பறையாட்டம், மாணவ மாணவியரின் நடன நிகழ்ச்சி கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. மாவட்டத் தலை வர் ந.காவியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். கிளைச் செயலாளர் சி.வாசுகி நன்றி கூறினார்.