tamilnadu

img

செம்பனார் கோவில் ஒன்றியம்: ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்பு

தரங்கம்பாடி: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் திங்களன்று பதவி ஏற்றுக் கொண்டனர். ஈச்சங்குடி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற புஷ்பமேரி குமார் பதவி ஏற்பு விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் அதிகாரி தேவ சகாயம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். காட்டுச்சேரி தலைவர் பதவிக்கு போட்டி யிட்ட விஜயலெட்சுமி சாமிநாதன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களும் காட்டுச்சேரி ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். இரு பகுதியிலும் ஏராள மான பொதுமக்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

;