tamilnadu

மின் மோட்டாரும் பழுது! மினிகுடிநீர்த் தொட்டிகளும் பழுது!! அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி

சீர்காழி, செப்.23- நாகை மாவட்டம் புத்தூர் ஊராட்சியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அடிப் படை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். புத்தூர் கன்னிக்கோயில் தெரு, மாரியம்மன்கோயில் தெரு, களத்துமேட்டுத் தெரு, ஆதிதிராவிடர் புதுத்தெரு, வாய்க்கால் கரை தெரு மற்றும் காளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கவில்லை. நிலத் தடி நீரை பயன்படுத்துவதற்கான கைப்பம்பு கள் பழுதாகி செயல்படாமல் உள்ளன. மேலும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள 5 மினி குடிநீர்த் தேக்க தொட்டிகள் கடந்த ஒன்றரை வருடமாக பழுதாகி பயனற்று கிடக்கின்றன. குடிநீர் கிடைக்காததால், புத்தூர் ஊராட்சி மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்ற னர். பழுதடைந்துள்ள மினி குடிநீர்த் தொட்டி களையும் மின் மோட்டார்களையும் சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
அடகுக்கடையில் கொள்ளை
இதே போல் ஆதிதிராவிடர் புதுத்தெரு, காளியம்மன் கோயில் தெரு, புத்தூரிலிருந்து பழையாறு செல்லும் முக்கிய சாலையிலும் மின்விளக்கு எரியாததால் தெருக்கள் இரு ளில் கிடக்கின்றன.  கடந்த 10 தினங்களுக்கு முன்பு புத்தூரில் உள்ள அடகு கடையில் பல லட்சக்கணக் கான மதிப்பில் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போன சம்பவத்திற்கு தெரு மின் விளக்குகள் எரியாததே காரணம் என்று கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புத்தூர் ஊராட்சியில் இயங்காத மினி குடிநீர்த் தொட்டி கள் அனைத்தையும் இயக்கவும், குடிநீர் கைப்பம்புகளை பழுது நீக்கம் செய்து தரவும், மின் விளக்குகளை போர்க்கால அடிப்படை யில் பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.