tamilnadu

மனைவி மரணம்: கணவர் தற்கொலை

தேனி, மார்ச் 8- தேனி மாவட்டம் பெரியகுளம் வடுக பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் பரமசிவம் (40). இவர் மனைவி கடந்த ஜனவரி மாதம் புற்று நோயால் காலமானார். இதனால் பரம சிவம் சோகத்தில் இருந்தார். இந்த நிலை யில் பரமசிவம் சம்பவதினத்தன்று தற் கொலைக்கு திட்டமிட்டு மாத்திரைகளை விழுங்கியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை பெரியகுளம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் உயிரிழந்தார். தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.