tamilnadu

img

மலை மாடுகளை வழக்கம் போல் வனத்தில் மேய்ப்போம்... வனத்துறை நடவடிக்கைகளை சந்திக்க தயார்.... தேனியில் பெ.சண்முகம் பேட்டி

தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மலை மாடுகள், பாரம்பரியநாட்டு மாடுகளை வழக்கம் போல் மேய்ப்போம். இது தொடர்பாக வனத்துறை நடவடிக்கை எடுத்தால் சட்டப்படி சந்திப்போம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட ஐந்து தாலுகாக்களில் சுமார் 20, 000 மலை மாடுகள் உள்ளன.  மலை மாடுகள் வளர்ப்போர் மேற்கு தொடர்ச்சி மலைகளில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மேய்ச்சல் நிலங்களாக பயன் படுத்தி வருகின்றனர். மலை மாடு வளர்ப்போருக்குவனத்துறையினர் மேய்ச்சல் அனுமதி  சீட்டுவழங்கி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அனுமதி சீட்டு வழங்குவதில் வனத்துறையினர் பல்வேறு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். ஒவ்வொருஆண்டும் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் அனுமதி சீட்டு வழங்கி வந்தனர்.

இந்தாண்டும் அனுமதி கேட்டு, வழக்கம்போல் மாடுகளுக்கு கால்நடைமருத்துவரிடம் தடுப்பூசி போட்டு சான்றிதழ்களை பெற்று உரிய ஆவணங் களை இணைத்து மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பித்தனர். ஆனால்தற்போது வரை அனுமதி சீட்டு கொடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த  மலைமாடு வளர்ப்போர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மாடுகளுடன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு கொடுத்தனர்.

போலீசார் கெடுபிடி
போராட்டத்தில் மாடுகள் கலந்துகொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டகிராமங்களில் சென்ற காவல்துறையினர் விடிய விடிய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். மாடுகளை  போராட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுத்துவிட்டனர்.

பேச்சுவார்த்தை 
இந்நிலையில்  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட் டத்தில் மாவட்ட வன அலுவலர் கௌதம்,மேகமலை வன உயிரின காப்பாளர் சர்ச்சில் துக்காராம்  போஸ்லே மற்றும்மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன், தேனி டிஎஸ்பி முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத் தின் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில், மாவட்டச் செயலாளர் கண்ணன், மாநில குழு உறுப்பினர் ராஜப்பன், கர்னல் பென்னிகுக் மலை மாடுகள் வளர்ப்போர் சங்க மாவட்ட தலைவர் கென்னடி, மாவட்டசெயலாளர் ராம்குமார், பொருளாளர் பாலகுமார், துணை தலைவர் பழனிச்சாமி, கூடலூர் ராமர், சி.இளங்கோவன், சட்ட ஆலோசகர் கே.முருகன், யாதவர் பாதுகாப்பு நிறுவனர் கேப்டன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது:
சுமார் மூன்று மணி நேரத்திற்கும்மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தேனி மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பாரம்பரிய, மலை மாடுகள் உள்ளன. இதில் 3,500 மாடுகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும், வழக்குநிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மீதி உள்ள மாடுகளை எப்படிவளர்ப்பது? மலை மாடுகள் மலையில் மட்டுமே மேயும், தரைப்பகுதியில் மேயாது. தனித்த குணமுடைய இந்த இனம் தேனி மாவட்டத்தில் மட் டுமே உள்ளது என தெரிவித்தோம். பாரம்பரிய மாடுகள் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என வினவினர். அதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டுகால்நடை பராமரிப்பு துறை மூலம் ஆய்வு செய்து ஆதாரம் திரட்ட வேண்டும் என கேட்டுக்கொண்ட அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டது .நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க சங்கத்தின் சார்பிலும், மாவட்டநிர்வாகம் சார்பிலும் முயற்சி மேற் கொள்ளப்படும். மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தரதீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார். அதுவரை வழக்கம் போல் வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்கப்படும். இது தொடர்பாக வனத்துறை நடவடிக்கை எடுத்தால் சட்டப்படி எதிர் கொள்வோம் என்றார்.