tamilnadu

img

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக

தேனி, ஆக.27-

       பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளா வில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது போல தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு உத்தமபாளையத்தில் நடை பெற்ற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

     தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் தேனி மாவட்டக்குழு ஒருங்கிணைப்பில் உத்தமபாளையத்தில் ‘வேற்றுமையில் ஒற்று மையும் வேரறுக்கும் வெறுப்பரசியலும்’ என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார்.  

     கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தாளா ளர் எம்.தர்வேஸ் முகைதீன், எஸ்.யு.எம் பள்ளிகளின் தாளாளர் எம்.எஸ்.பிரபாகர், பேரூ ராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சி.மு.இப்ராஹிம் வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலை வர் பீட்டர் அல்போன்ஸ், அய்யா வைகுண்டர் பதி  மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிக ளார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

காஷ்மீர் பைல்ஸ்க்கு விருதா?

      எம்.ராமகிருஷ்ணன் பேசுகையில், சிறு பான்மை மக்களுக்கு எதிரான ‘காஷ்மீர் பைல்ஸ் ‘என்னும் திரைப்படத்திற்கு மத நல்லிணக்க விருது வழங்கியுள்ளது. படத்தை யாரும் பார்க்க வில்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திரையிடப்படவில்லை. ஆனாலும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரதமரே பாராட்டுகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படத்தைப் பார்க்க அரசு அலுவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்பட்டது. தீவிரவாதிகளாக கட்டமைக்கும் முயற்சியே இப்படம். இதற்கு விருது என்பது அநீதியானது என்றார். 

பன்முகத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம்!

     நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, ஒவ்வொரு மதத்தி லும் பல்வேறு முறைகளில் வழிபாடு நடை பெறுகிறது. திருமணங்கள், இறப்பு நிகழ்ச்சி களில் பல முறைகளில் சடங்குகள் நடைபெறு கிறது. உணவு மற்றும் சமூக பழக்க வழக்கங் கள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. சுதந்திரம் பெற்றவுடன் மதச்சார்பற்ற அரசு என அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படும் நிலையில் ஒரு மதத்தை தான், ஒரு மொழியைத் தான் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகி றார்கள். தனி மனிதனுக்கு மட்டுமே மதம். அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றார்.

புயல் வேகத்தில்  வெறுப்பு அரசியல்

     கே.பாலபாரதி பேசுகையில், வெறுப்பு அரசியல் புயல் வேகத்தில் பரவி வந்து கொண்டி ருக்கிறது. 2024-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலை சரியாக பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் கட்சி அலுவ லகத்தில் கூட கூட்டம் நடத்த முடியாது. ஆக்கிர மிப்பு என்ற பெயரில் 400 முஸ்லீம் வீடுகள் எந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு தான். நடைபெறும் பொதுத் தேர்தல் இறுதிக்கட்ட போர் ஆகும்’’ என்றார்.

இடதே உன்னதமானது  பால பிரஜாபதி

     அடிகளார் பேசுகையில், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியா. ஆளும் வர்க்கத்தினர் ஒற்றுமைக் குள் வேற்றுமையை வளர்த்து வெறுப்பு அரசி யல் செய்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களை பகைவர்கள், எதிரிகளை போல் நடத்துகிறார்கள். இந்தியா என்பது இந்துக்க ளுக்கு மட்டுமல்ல; இங்கு குடியிருக்கும் எல்லா  மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தமா னது. தனி மரம் தோப்பு ஆகாது. எல்லா மதத்தி னரும் சேர்ந்தால் தான் இந்தியா. இதயம் மனிதனின் இடது பக்கம் உள்ளது. ஈரமும், நட்பும் நேசமும் இடது பக்கம் இருக்கிறது.  

    இடது என்பது உன்னதமானது. அன்பை  பரிமாறிக் கொள்ளவே மதம். மதத்தை சொல்லி  அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். மனு தர்ம வாதிகளுக்கு ஆன்மீகம், சமயம் தெரிய வில்லை. பொது சிவில் சட்டத்தால் பெரும் பான்மையான இந்துக்கள் பாதிக்கப்படு வார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் பாதிப்படைவார்கள்’’ என்றார்.

 கொடுமையான ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்! 

     தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில்,  ‘‘சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப் பட்டது குறித்து மோடியை விஞ்ஞானி போல்  பாஜகவினர் பேசி வருகிறார்கள். நேருவுடன் பயணம் செய்த நாசாவில் பணி புரிந்த இந்திய விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நம் தேசம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் எனக் கூறி, நாசாவில் தனது பணியை ராஜி னாமா செய்து விட்டு இந்தியாவில் பணியாற்று வதாக தெரிவித்தார். அவரை தனது இல்லத்தி ற்கு அழைத்து நேரு, ரூ.2 கோடி ஒதுக்கி இஸ்ரோ நிறுவனத்தை அமைத்து அவரை தலைவராக்கினார். அன்று போட்ட புள்ளிதான் சந்திரயான். அவர் காலத்தில் தான் மாநில முதல்வர்கள், பொதுவுடைமை மூத்த தலை வர்கள், காமராஜர், இந்திரா போன்ற தலைவர் கள் பங்களிப்புடன் 250-க்கும் மேற்பட்ட பொ துத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்’’ எனக் குறிப்பிட்டார்.  

      மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜகவினர் வெறுப்பு அரசியல் செய்து வருகிறார்கள். ஹரியானா மாநிலத்தில் 100, 200 வருடம் வாழ்ந்த முஸ்லிம் வீடுகளை எந்திரம் கொண்டு இடிக்கிறார்கள். மணிப்பூர் கலவரத்தில் 176 பேர் கொலை செய்யப்பட்டும், 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தும், 350 தேவா லயங்கள் இடிக்கப்பட்டு, இரண்டு பழங்கு டியின பெண்கள் நிர்வாணமாக்கியும் கொடு மைகள் அரங்கேறின. இதை உலக நாடுகள் அனைத்தும் வன்மையாக கண்டித்தும், பிரதமர் வாயே திறக்கவில்லை எனக் குறிப்பிட்ட பீட்டர் அல்போன்ஸ்.

      ‘‘நாட்டு விடுதலைக்கு முஸ்லிம்களின் பங்கு மறக்க முடியாது. இந்திய விடுதலைக்கு போராடி உயிரைத் தியாகம் செய்தவர்களின் பெயர்கள்  தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் இடம் பெற்றுள்ளது. அதில் 80 ஆயிரம் பேர் முஸ்லிம்கள். எனவே சாதி, மத,மொழி பேதமின்றி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமையை கொண்டு செல்வோம். சாதி வெறி, மதவெறியை தூண்டுபவர்களை அடையாளம் கண்டு கொடுமையான ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’’ என்றார்.  

     கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, அமைப்பின் மாநிலச் செயலாளர் வ.கல் யாணசுந்தரம், மாவட்டத் தலைவர் ஜி.எம்.நாக ராஜன், மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.செளக் கத் அலி, மாவட்டத் துணைத் தலைவர் கே.ராஜப் பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேற்கு மாவட்டப் பொருளாளர் பெர்க்மான்ஸ், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் எம்.முகமது சபி, கிறிஸ்தவ மக்கள் பேரமைப்பு தலைவர் சம்பட்டி நாகராஜன் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் டி.கே.சீனிவாசன் நன்றி கூறினார்.