tamilnadu

கஞ்சா கடத்த முயன்றவர் கைது

கம்பம், மார்ச் 8- கம்பம் கோம்பை சாலை  தெரு பகுதி யில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவ தாக வடக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்ஆய்வா ளர் சிலைமணி தலைமையில் சார்பு ஆய்வாளர் வினோத்ராஜா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றனர்.அப்போது கோம்பை சாலை யில் உள்ள தனியார் பள்ளி அருகே ஒரு பெண் மூடையுடன் நடந்து வந்தார். அவரி டம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். அவரது மூடையை சோதனை செய்து பார்த்த போது,அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவர் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த முனி யாண்டி மனைவி சிவனம்மாள் (52) என்ப தும், கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. கஞ்சா வை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிவனம்மாளை கைது செய்து செய்து சிறையிலடைத்த னர்.