tamilnadu

img

பனை ஓலையில் வேளாங்கண்ணி ஆலயம்...

தூத்துக்குடி:
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கருங் குளத்தில் பனை ஓலையில் வேளாங்கண்ணி ஆலயத்தின் மாதிரியை உருவாக்கி பனைத் தொழிலாளி அசத்தியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி(60). இவர் பனை தொழிலாளி. இவர்  பனையோலையில் பல்வேறு  சிலைகளை  உருவாக்கி வருகிறார்.7 அடி உயர காமராஜர் சிலை, அப்துல் கலாம்சிலை,  உழவன், உழத்தி, ஜெயலலிதா உள்படபல்வேறு உருவங்களை இவர் பனை ஓலையில்செய்துள்ளார். 
இந்த வருட கிறிஸ்துமஸை முன்னிட்டு இவர்பனை ஓலையில் வேளாங்கண்ணி ஆலய சிற்பத்தினை மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவர் செய்த பனை ஓலை பொருள்களை தனது வீட்டில்பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார். இதனை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

;