தூத்துக்குடி ரவுடி கொலை: சென்னையில் ஒருவர் கைது
தூத்துக்குடி, செப்.1-தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் சரவணன் என்ற சிந்தா சரவணன் (36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்கு கள் நிலுவையில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.கே.நகரில் வீட்டில் இருந்த சரவணனை 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய் தது. இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜன் (30) என்பவரை கைது செய்தனர். மற்ற குற்றவாளி களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வெள்ளியன்று இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல் (37), மீளவிட்டானை சேர்ந்த பாலசிங் (39) ஆகிய 2 பேரும் சிவகாசி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய தூத்துக் குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவை சேர்ந்த பிர வுன் மகன் ஜான்சன் (43) என்பவரை தனிப்படை போலீ சார் சென்னையில் வெள்ளியன்று கைது செய்தனர். அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முனியசாமி உள்ளிட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தண்ணீரின்றி வறண்டு காணப்படும் களக்காடு வடக்கு பச்சையாறு அணை
திருநெல்வேலி, செப்.1-களக்காடு வடக்குப் பச்சையாறு அணை கடந்த 7 மாதங்க ளாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி. இந்த அணை கடந்த 2018ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது 37 அடி மட்டுமே தண்ணீர் நிரம்பியது. தொடர்ந்து டிசம்பர் மாதம் அணையிலிருந்து பாசனத்திற் காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் 2019 ஜனவரி யில் அணை நீரின்றி வறண்டது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக அணை வறண்டே காணப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சில நாள்கள் பெய்த மழையால் மலையடிவாரத்தையொட்டியுள்ள பாசனக் குளங்கள் நிரம்பின. குடிமராமத்து பணி நடைபெற்று வந்த களக்காடு தாமரைகுளம், பத்தை பெரியகுளம், சீவலப்பேரி குளம் ஆகிய குளங்களில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடி யாத நிலை ஏற்பட்டது. திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பியது. ஆனால் களக்காடு மலையடிவாரத்தில் உள்ள வடக்குப் பச்சையாறு அணைக்கு தண்ணீர் செல்லவில்லை. இதற்கு காரணம், களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் உள்ள பாச னக் குளங்களில் ஓரளவு தண்ணீர் தேங்கினால்தான் அணை யில் நீரை திறக்க வேண்டும் என்ற விதிமுறை கடைப்பிடிக் கப்படுவதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன. தென்மேற்குப் பருவமழை கைகொடுக்காததால் வடக்குப் பச்சையாறு அணையும், 50-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும் வறண்டே காணப்படுகின்றன. வடகிழக்குப் பருவ மழைக்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் அணை மற்றும் குளத்தின் மூலம் பாசனவசதி பெறும் விவசாயிகள் கடும் தண்ணீர் பிரச்சனையை எதிர்நோக்கும் நிலைக்கு ஆளாகி யுள்ளனர்.
வீட்டு காய்கனி உற்பத்தி திட்டம் களக்காடு வட்டாரத்தில் 1,700 பயனாளிகள் இலக்கு
திருநெல்வேலி, செப்.1-நெல்லை மாவட்டம் களக்காடு வட்டாரத்தில் முதலமைச்ச ரின் கிராமப்புற வீட்டு காய்கனி உற்பத்தி திட்டத்தின்கீழ் 1,700 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளதாக தோட்டக் கலைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து களக்காடு தோட்டக்கலை உதவி இயக்கு நர் எஸ்.என். திலீப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: களக்காடு வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலமாக, தமிழக முதலமைச்சரின் கிரா மப்புற வீட்டு காய்கனி உற்பத்தி திட்டம், இவ்வட்டாரத்தில் உள்ள 17 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தலா 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1,700 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். முன்பதிவு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி களுக்கு, இயற்கை முறையில் வீட்டு காய்கனித் தோட்டம் அமைப்பதற்காக, ஏழு வகையான காய்கனி விதைகள் மற்றும் இயற்கை உரம் இலவசமாக வழங்கப்படும். இத்திட் டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் களக்காடு சாலைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.