ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
திருவாரூர், ஜூன் 13- திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில் வரும் 28-ம் தேதி காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம் தொடர் பான குறைகள் ஏதுமிருப்பின், அது தொடர்பான மனுக் களை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்)மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் என்ற முக வரிக்கு 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதி யர் தங்களது விண்ணப்பத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் சம்பந்தப்பட்ட உயரதி காரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலி
தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த நைனாங்குளம் கிராமத்தில், பட்டுக்கோட்டை முடி கொண்டார் நகரைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் குத்த கைக்கு எடுத்து நவீன அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பாபநாசம் தாலுகா செண்பக புரத்தைச் சேர்ந்த விசுவநாதன்(40) கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன்(45) ஆகியோர் வேலை செய்து வந்த னர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியள வில் நெல் அவியல் நடந்து கொண்டிருந்த போது அங்கிருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இதில் விசுவநாதன், நட ராஜன் இருவரும் காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வ நாதன் இறந்தார். ஆபத்தான நிலையில் நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.