tamilnadu

தூய்மைப் பணியாளர்களுக்கு   பாதுகாப்பு உபகரணம் வழங்குக! சிபிஎம் வலியுறுத்தல்

 திருத்துறைப்பூண்டி,  மார்ச் 21- கொரோனா வைரஸ் பாதிக்கா மல் தடுக்க தூய்மை பணியாளர்க ளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  கொரோனோ நோய் தாக்கம் அதிகரித்து வரும் இச்சூழலில் தனக்கு நோய் இருக்கிறது என ஒருவர் அறியாதவரை அவர் பயன் படுத்திய முகக்கவசங்கள், நோயா ளிகள் பயன்படுத்திய உணவு பைகள், சளித் தொற்றால் பயன் படுத்திய துணி வகைகள், நோய் தொற்று உள்ளவர்கள் கொட்டும் குப்பைகளை துப்புரவுத் தொழிலா ளர்களே தினந்தோறும் சேகரிக் கின்றனர்.  மேலும் பேருந்து நிலையம், சந்தைகள், ஆலயங்கள், வணிக வளாகங்களிலுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி வரு கின்றனர். இப்படி அகற்றப்படும் கழிவுகளில் நோய் தொற்று உள்ளவர்கள் பொருட்களை வீசி யிருந்தால் கொரோனோ வைரஸ் அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது.  பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பா லான துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு முகமூடிகள், கையு றைகள், காலணிகள், சீருடைகள், சோப்பு, சுத்திகரிப்பான், ஹேண்ட் சானிடைசர் உள்ளிட்டவை போதிய அளவில் வழங்கி நோய் தொற்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்க ளுக்கும், அவர்கள் மூலம் பொது மக்களுக்கும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் கே.ஜி.ரகுராமன் வலியுறுத்தி உள்ளார்.