திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகரம் 18-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் கே.மகாலிங்கம் திங்களன்று காலை இயற்கை எய்தினார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு உறுப்பினரும், விவசாய சங்க நகர செயலாளருமான எம்.ஜெயபிரகாஷ், எம்.ஜெயராஜ், எம்.ஜெயேந்திரன் ஆகியோரது தகப்பனாராவார். அவரது உடலுக்கு, கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாய சங்க மாநிலத் தலைவர் கே.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்டத் தலைவர் எம்.தம்புசாமி, மாவட்டப் பொருளாளர் எஸ்.சாமிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், எம்.சேகர், சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பி.கே.பாண்டியன், டி.சுப்பிரமணியன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.