tamilnadu

திருவள்ளூர் முக்கிய செய்திகள்

தேங்கும் ரசாயன கழிவு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருவொற்றியூர், ஆக.12-  தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் திருவொற்றியூர் - மணலி சாலையோரம் விடப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தோல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. திருவொற்றியூர் - மணலி சாலை வழியாக மணலி புதுநகர், மாதவரம் போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்து கன்டெய்னர் லாரி, கார், பைக் போன்ற ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் குளம்போல் தேங்கி வருகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இந்த வழியாக வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தோல் நோய் ஏற்படும் நிலை உள்ளது.  தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் அப்பகுதியில் உள்ள சில நிறுவனங்கள் சுத்திகரிக்காமல் அப்படியே தேக்கி வைத்து இருப்பதால், மழை பெய்யும்போது நிரம்பி தொழிற்சாலை யில் இருந்து கசிந்து மக்கள் நடமாட்டம் உள்ள சாலை களில் வந்து தேங்கி விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  எனவே சாலையில் தேங்கியுள்ள ரசாயன கழிவுநீரை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தவும், சட்ட விரோதமாக கழிவுநீரை சாலையில் வெளியேற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவறையை சீரமைக்க உறுதி: போராட்டம் வாபஸ்

திருவள்ளூர், ஆக. 12-  திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள், வியாபாரிகள் என பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதன் விளைவாக தாமரை ப்பாக்கம் கூட்டுச்சாலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கழிவறை கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.  இதனால் தாமரை ப்பாக்கம் கூட்டுச்சாலை க்குக்கு வரும்பயணிகள், வியாபாரிகள், பெண்களு க்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது, உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததால் கழிவறை பராமரிக்காமல்  விட்டு விட்டதால் பழு தடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கழிவறையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஆட்டோ சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த எல்லாபுரம் பிடிஒ வாசுகி சங்க தலைவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நிதி ஒதுக்கீடு செய்து அடுத்த ஒரு வாரத்தில் கழிவறை சீரமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து போரா ட்டம் கைவிடப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை யில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், வட்டத் தலைவர் எம்.பழனி, சிஐடியு நிர்வாகிகள் ஏழுமலை, முனுசாமி, பாபு,  வியாபாரிகள் சங்க நிர்வாகி கள் கணேசன், மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.