tamilnadu

img

பெட்ரோ ரசாயன பூங்காவிற்காக கைப்பற்றப்பட்ட நிலத்தை ஒப்படைத்திடுக

திருவள்ளூர், ஜூன் 19-   காட்டுப்பள்ளி, காளாஞ்சியில் மீட்கப்பட்ட நிலங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமே  திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட காளாஞ்சி, காட்டுங்களி, புழுதி வாக்கம் மற்றும் வாயலூர் ஆகிய பகுதிகளில் 1997 ஆம் ஆண்டு பெட்ரோ ரசாயன பூங்கா அமைப்ப தற்காக  61.29 ஹெக்டர் நிலத்தை  தமிழக அரசு கையைப்படுத்தியது. இந்த  நிலத்தை தமிழ்நாடு தொழிற்சாலை வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கியது. ஆனால் இந்த நிலத்தைப் பயன்படுத்தப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து எடுத்த நிலத்தை என்ன செய்வது என்று தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ள லாம் என சிட்கோ அறிவித்தது.  பயன்படுத்தப்படாத நிலத்தை தமிழக அரசு விவசாயிகளிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் அரசு கொடுக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு அந்த நிலத்தில் பாலாஜி, நிஜாமுதீன் என்பவர்கள் இறால் பண்ணை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வாயலூர் ராம நாதபுரம் கிராமத்தை சேர்ந்த 10 விவசாயிகள் தாங்கள் வழங்கிய நிலத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வில்லை என கூறி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.  காவல்துறை யினர் விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும், நிலத்தை மிகவும் குறைந்த விலைக்கு வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் நிலம் வழங்க வேண்டும்  என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 2018 அக்டோபர் 25 ஆம் தேதி  இறால் பண்ணை அருகில் மறியல் போராட்டம் நடத்தினர்.  பின்னர், நவம்பர் 26 ஆம் தேதி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன் பிறகு, அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மின் வாரிய அதிகாரி யிடம் புகார் கொடுத்தது சிபிஎம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால், 2019 ஜூன் 15 அன்று இறால் பண்ணை இடிக்கப்பட்டது.  இதன் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டதாக வருவாய்த்துறை அறிக்கை வெளியிட்டது.

சிபிஎம் கோரிக்கை
சட்ட விரோதமாக அனுமதி யின்றி அரசு நிலத்தை கையகப்படு த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோத மாக மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மீதும், 2001-முதல் 2019 வரை அரசின் நிலத்தில் இறால் பண்ணை நடத்தி வந்ததை கண்டு கொள்ளாமல் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வலியுறுத்தியுள்ளார்.