tamilnadu

img

மதுவால் 96 ஆயிரம் பெண்கள் விதவையாக மாறிய கொடுமை

திருவள்ளூர், அக்.1-  திருவள்ளூரில் இயங்கும் மதுபான கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் பெரிய குப்பம் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கடந்த ஓராண்டாக அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை குடியிருப்பு மத்தியில் இயங்கி வருவதால் அப்பகு தியில் பெண்கள், குழந்தை கள் என அனைவரும் பாதிக்கின்றனர். இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள்  தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இதனால் இரு முறை மதுக்கடை மூடப்பட்டது. ஆனால் ஆளும் கட்சியின் உதவியுடன் மீண்டும் மதுக்கடை திறந்து ஒராண்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  திரு வள்ளூர் ரயில் நிலையம் அரு கில் மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் இ.மோகனா தலைமையில் செவ்வாயன்று (அக்.1) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.ரமா, பொருளாளர் ஏ.பத்மா, பகுதி நிர்வாகிகள் எஸ். விஜயா, எஸ். தனலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஏ.மோகனா, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். கலையரசன், மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாநிலைப் போராட்டத்தை துவக்கிவை த்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பேசுகையில்,  ‘மதுவால் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 96 ஆயிரம் இளம் பெண்கள் விதவைகளா கியுள்ளனர். பெண்களை நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டு தாலிக்கு தங்கம் என்ப தெல்லாம் ஏமாற்று வேலை யாகும்.  எனவே பொது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு  மதுக்கடை களை மூட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.