tamilnadu

img

தங்கக் கடத்தலில் இருந்து தாவும் விசாரணை அமைப்புகளும் ஊடகங்களும்....

திருவனந்தபுரம்:
மத்திய புலனாய்வு அமைப்புகள் தங்கக் கடத்தல் வழக்கில் பின்வாங்கியபோது,  அவர்கள் சொன்ன அனைத்தையும் அப்படியே வெளியிட்ட ஊடகங்கள் அவற்றை மென்று விழுங்கிவிட்டன.இதன் மூலம், மனோரமா, மாத்ருபூமிஉள்ளிட்ட ஊடகங்கள் இந்தவழக்கை கடந்து வருகின்றன.நான்கு மாத விசாரணைக்குப் பிறகும், அமலாக்க இயக்குநரகம் (இடி), என்.ஐ.ஏ., சுங்கத்துறை ஆகியவை சொப்னாவின் லாக்கரில் இருந்த பணம் குறித்துதொடர்பில்லாத வாதத்தை முன்வைத்தன. இந்த முரண்பாடு சாதாரணமானதல்ல என்று மனோரமா, மாத்ருபூமி உள்ளிட்ட ஊடகங்கள் இப்போது கூறுகின்றன. லாக்கரில் இருந்த ரூ .1கோடி தங்க கடத்தலுக்கான அன்பளிப்பு என்று சுங்கத்துறையும் என்ஐஏவும் கூறுகின்றன.இருப்பினும், இது வடக்கஞ்சேரி லைப் மிஷன் திட்டத்தின் லஞ்சம்என்று அமலாக்க இயக்குநரக அறிக்கை கூறுகிறது.இதை ஏற்றுக் கொண்டால், இந்த வழக்கில் சிவசங்கர் தனது தொடர்பை இழக்க நேரிடும் என்று மனோரமா கவலைப்படுகிறது.உண்மையில் ஒரு கோடி ரூபாயை யார்
வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியையும் அந்த நாளிதழ் எழுப்புகிறது.

இதை  சுங்கத்துறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அதன் பரிந்துரை. எம்.சிவசங்கர் தங்கக் கடத்தலின் சூத்திரதாரி என்றால், அவருக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லையே என்கிறகேள்வி எழுகிறது. தங்கக் கடத்தலுடன் மாநில திட்டமிடல் ஆணையத்தை  இணைப்பது எப்படி?.இதையெல்லாம் சுங்கத்துறை கண்டுபிடிக்கட்டும் என்று செய்தித்தாள் கூறுகிறது.இன்னும் அதைக்கண்டுபிடிக்க சுங்கத்துறையாலும் என்ஐஏயாலும் முடியவில்லை என்று அமலாக்க இயக்குநகரத்தின் வாக்குமூலம் கூறுகிறது.இந்த விசாரணை முகமைகள் கூறுவதில் பல செல்லுபடியாகாது என்ற வாதம் வலுவாக இருக்கும்போது அவை தமக்குள் வாதிடுகின்றன. இதன் மூலம், இதுவரை தங்கக் கடத்தல் பற்றி செய்திகள் வழங்கிய  மனோரமாஉள்ளிட்ட ஊடகங்கள் விசாரணை முகமைகளுக்குள் நடக்கும் வாதங்களை  மென்று விழுங்க வேண்டியகட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.