திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள,ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தில், 3 கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகத்தையும், குடியிருப்பு வளாகத்தையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.