திருவண்ணாமலை, ஜூன் 5-திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் அருகே உள்ளது கரூர் வைஸ்யா வங்கி. இங்கு பொது மக்கள் அடகு வைத்த, 1.5 கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகி உள்ளதாக தகவல் பரவியதால், பொது மக்கள் வங்கி முன்பு குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கிக்குச் சென்று, தாங்கள் அடகு வைத்த நகைகள் குறித்து, வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தனர். ஆனால், வங்கி அலுவலர்களும், காவல் துறையினரும், இது குறித்து எந்த புகாரும் இதுவரை வரவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.