மாநில அரசுகள் மத்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புக்களுக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த வலியுறுத்தி திங்களன்று (ஆக.17) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக வடமாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.