tamilnadu

img

வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அட்டை கோரி முற்றுகை

திருவண்ணாமலை, ஜன. 1- திருவண்ணாமலை ஒன்றியத்தில் டிசம்பர் 27 அன்று நடந்த உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்கு கள், ஜன.2 அன்று  திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை அரங்கத்திற்குள் செல்வதற்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படாமல் இருந்தது.  கடந்த இரண்டு நாட்களாக  வேட்பா ளர்களும்,முகவர்களும்  திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குவிந்த னர். ஆனால் யாருக்கும் அனுமதி அட்டை  வழங்கப்படவில்லை. அதிகாரிகள் அனுமதி  அட்டையை தயார் செய்யாத நிலை இருந்த தால், தொடர்ந்து 2 நாட்களாக முகவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகை யிட்டனர்.  புதனன்று (ஜன.1) மாலை வரைக்கும் அனுமதி அட்டைகள் வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த வேட்  பாளர்கள் மற்றும் முகவர்கள் திருவண்ணா மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்  கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்று கையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;